மகளிர் விவகார அமைச்சராக கருணா?


ஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் புத்துணர்ச்சி பெற்றுள்ள கருணா செய்த கொலைகள் எல்லாம் மூடி மறைக்கப்படும் எனவும் ஏற்கனவே கூட்டமைப்பின் எம்பி.சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னைய ரணில் -மைத்திரி அரசில் முடங்கியிருந்த கருணா தற்போது மீண்டும் மன்மதனாகி உலகம் சுற்றும் புகைப்படங்களை சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு அம்பலப்படுத்திவருகின்றன.

தற்போது புதிய படத்தில் நீச்சலுடை சிங்கள அழகிகளுடன் கருணா நிற்பதை அம்பலப்படுத்தியுள்ள அவை நாடாளுமன்ற தேர்தலின் பின்னராவது அவருக்கு கோத்தபாய அமைச்சினை வழங்கவேண்டுமெனவும் அதுவும் மகளிர் விவகார அமைச்சே அவருக்கு பொருத்தமென தெரிவித்துள்ளன.

No comments