சஜித்தை நியமிக்கும் ஐதேக முடிவை சபாநாயகர் ஏற்றார்

இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று மாலை எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சஜித் பிரமேதாசவை எதிர்க்கட்சித் தலைவராக்க கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையிலேயே அக்கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்படி ஜனவரி 3ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

No comments