கோத்தா விடுத்த முக்கிய உத்தரவு

கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்து அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.

அந்தவகையில் கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மட்டுமே முழுமையான மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் பெறப்படவேண்டும்.

ஆனால் இலகுரக (சிறிய) வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு கண் பார்வைப் பரிசோதனை சான்றிதழ் மட்டும் போதுமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

No comments