சாதித்து காட்டிய முல்லைதீவு மாணவி?


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் ரவிச்சந்திரன் யாழினி எனும் மாணவி வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.

ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் இவருடைய தாயாரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையும் கல்வியில் முன்னேற்றுவதற்காக உழைத்துவரும் மாணவியையே அவர்கள் வாழ்த்திவருகின்றனர்.

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியைச்சேர்ந்த குறித்த மாணவி வணிகத்துறையில் மாவட்டரீதியில் முதல் நிலை அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments