கமாலின் கருத்தை ஏற்க இயலாது- சிவிகேசி சீற்றம்

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாதென்று, பாதுகாப்புச் செயலாளர் கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லையெனவும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தற்போதுள்ள பிரச்சினையெனவும் தெரிவித்தார்.

No comments