வடக்கில் முப்படை:எல்லையில் தாக்குதல்!


யாழ்.குடாநாட்டில் முப்படைகளும் தேடுதல்களை நடத்திக்கொண்டிருக்க வவுனியாவின் சிங்கள குடியிருப்பு பகுதியான, போகஸ்வௌ இராணுவ முகாம் சூழலில் சிப்பாய் ஒருவர் இன்று தாக்கப்பட்டுள்ளார்.அத்துடன் இனந்தெரியாதவாரால் இராணுவ சிப்பாயின் துப்பாக்கியும் கைப்பற்றி எடுத்துச்செல்லப்பட்டுமிருந்தது.

எனினும் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கெக்கிராவ பகுதியில் இருந்து துப்பாக்கி இராணுவ காவல்துறையினரால்; கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர் என, தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய்,  இன்று (25) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கி பறித்துச்செல்லப்பட்டிருந்தது.

காயமடைந்த இராணுவ சிப்பாய் அநுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையிலேயே,  சிங்கள குடியிருப்பு பகுதியான கெக்கிராவ பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments