கரப்பான் பூச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்!

தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் அர்சிமந்திரத்தா கரப்பான் என்னும் அரிய வகை கரப்பான் பூச்சியை  ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்தார்.  சுமார் 8 செமீ நீளத்திற்கு வளரும் இந்த கரப்பன் கடந்த சில நாட்களாக  உடல் நிலை சரியில்லாமல் சிரமப்பட்டு வந்ததை  உணர்ந்த  அதன்  உரிமையாளர் அதை உடனடியாக அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
கரப்பானை  பரிசோதித்த மருத்துவர் கரப்பான் கர்ப்பமாக இருப்பதையும், அது பிரசவிக்கும் நேரம் வந்துவிட்டதால் தான் அவதிப்பட்டு வந்ததையும் கண்டறிந்துள்ளார். ஆனால்  இயற்கையாகப் பிரசவிப்பதில் அந்த கரப்பானுக்கு சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவர் அதற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பி[பார்க்க முடிவெடுத்துள்ளார். முதலில் கரப்பானுக்கு  ஒரு மயக்க மருந்து, சாதாரண அனஸ்தீஷியா, மற்றும் வாயு அனஸ்தீஷியா ஆகியவை செலுத்தப்பட்டது.  பின்னர் கரப்பானின்  உடலிலிருந்து முட்டை பை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. இதனால் கரப்பான் உயிர் பிழைத்தது.

இதுகுறித்து கூறியுள்ள மருத்துவர், கரப்பானின் உரிமையாளர் அதை உரிய நேரத்திற்குக் கொண்டு வந்ததால் தான் கரப்பான் காப்பாற்றப்பட்டது. இல்லாவிட்டால் தொற்று  ஏற்பட்டு அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.  இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

No comments