ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கல்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் 10ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயற்பட்ட மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நேற்று (14) விருது வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த விருது வழங்கும் நிகழ்வு உப்புக்குளம் விருந்தினர் மாளிகையில் இடம்பெற்றது.
இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான,
  • புகழேந்தி லோறன்ஸ் கொன்சால் வாஸ்கூஞ்ஞ.
  • என்.யூட்ஸ் பெலிஸ்ரஸ் பச்சேக்.
  • பி.அந்தோனி மார்க்.
  • எஸ்.றொசேரியன் லெம்பேட்.
கனிஷ்ட ஊடகவியலாளர்களான,
  • வை.கஜேந்திரன்.
  • ஜே.நயன்.
  • ரா.ஜீவகன்.
  • ர.ரவிக்குமார்.
  • சே.ஜெகதீஸ்வரன்.
உட்பட 9 ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, சிவில் அமைப்புக்களில் நீண்ட காலமாக சேவையாற்றிய மன்னாரைச் சேர்ந்த பேதுரு பெனடிக்ற் என்பவரும் விருது வழங்கி கௌரிக்கப்பட்டார்.
நிகழ்வில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், முருகன் கோயில் பிரதம குரு மஹா தர்ம குமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜீம்மாப்பள்ளி மௌலவி எஸ்.ஏ.அஸீம், அருட்பணி பத்திநாதன், மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்துகொண்டதோடு அவர்களால் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

No comments