ரங்காவிற்கு பிணையாம்?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீPரங்கா உள்ளிட்ட ஆறு பேர், வவுனியா நீதிமன்றத்தால் இன்று (16) பிணையில் விடுக்கவிக்கப்பட்டுள்ளனர்.
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் இவர்கள், விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் வழக்கை மாற்றி எழுதி சிறீரங்கா தப்பித்திருந்தார்.
எனினும் சுமார் 8வருடங்களின் பின்னர் மீள கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment