கலைத்தாலும் செல்லாது புளொட்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப் போவதில்லையென மீண்டும் மீண்டும் சித்தார்த்தன் வலியுறுத்திவருகின்றார்.
எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.
எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடவுள்ளது. அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.
மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும். போட்டிகள் கூடுகின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாக நாங்கள் பேசுகின்றபோது கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைக் கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்டவேண்டும் என்ற அவிப்பிராயமும் இருக்கின்றது.
அது எவ்வளவு சாத்தியமென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தப் பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.
எனினும் எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும்.
கடந்த காலங்களைப் போல 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.
தற்போதுள்ள கள நிலைவரங்கள் எப்படி சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார்.
Post a Comment