17 பேரின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம்!


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
இந்த கைதை கண்டித்து இன்று (03-12-19) காலை கோவை திருவள்ளுவர் பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த 150க்கும்கலந்துகொண்டவேளையில் கைதாகியுள்ளனர்.

No comments