அவுஸ்திரேலியா செல்ல முயற்சி; 15 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 15 பேர் நீர்கொழும்பு பகுதியில் நேற்று (04) இரவு நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களை கொண்டு சென்ற வாகனச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சாரதி தலவாக்கலை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments