இனி இலங்கை இராணுவம் கொல்லாது:சரத் பொன்சேகா?


இலங்கை இராணுவம் மக்களை கொல்வதற்கும் அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்படாத ஒரு பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்குவோம். எங்கள் ஆட்சியில் தண்ணீர் கேட்டவா்களுக்கும், ஈ.பி.எவ் கேட்டவா்களுக்கும், மண்ணெண்ணை கேட்டவா்களுக்கும் துப்பாக்கியினால் பதிலளிக்க மாட்டோம் என  அமைச்சா் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட் பாளா் சஜித் பிறேமதாஸவை ஆதாித்து நல்லுாா்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

கோட்டாபாய ராஜபக்சவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் வாக் குகளை சிதறடிப்பதற்கு பலா் இங்கே முயற்சிக்கிறாா்கள். அவா்கள் தொடா்பில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். மக்கள் உங்கள் வாக்குகளை எங்களுக்கு வழங்கவேண்டும். 

 போாினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக ஒரு நாட்டில் அமைதியான வாழ்க் கையை நான் விரும்புகிறேன். என்னை தன்னுடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்கும் படி சஜித் கூறியு ள்ளாா். நான் பாதுகாப்பு அமைச்சை பொறுப்பேற்றால் நாட்டில் உள்ள சகலரையும் ஒன்றிணைப்பேன். 

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை ஒத்த தாக்குதல்கள் இடம்பெறாது. இராணுவம் மக்களை கொல்வதற்கும், மக்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்படாது. தண்ணீா் கேட்பவா்களுக்கும், ஈ.பி.எவ் கேட்பவா்களுக்கும், மண்ணெ ண்ணை கேட்பவா்களுக்கும் துப்பாக்கியால் பதிலளிக்கப்படாது என்றாா்.

No comments