முன்னணியை கணக்கில் எடுக்காதீர்கள் மறைமுகமாக சாடினார் சரத்


தமிழரசுக் கட்சிக்கு வழங்கியது போன்ற ஆதரவை நீங்கள் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கியிருந்தீர்கள். நீங்கள் எப்போதும் எமக்கு நன்றி கடன் உடையவர்களாகவே செயற்பட்டீர்கள் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று (08) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார்.

மேலும்,

சிலர் தேர்தலை புறக்கணிக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அதனை நீங்கள் கணக்கில் எடுக்காதீர்கள்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு என்று இல்லை எல்லோரையும் ஒருதாய் மக்களாக நேசிக்கிறோம்.

இனியும் ஒரு யுத்தம் நடைபெறாது. யுத்தத்தின் பின் நீங்கள் சுதந்திரம் அடைந்தீ்ர்கள். ராஜபக்ச யுகம் எதையும் செய்யவில்லை - என்றார்.

No comments