குடியுரிமை விவகாரத்தை காட்டி தப்பி ஓடிவிட வேண்டாம்

தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதால் குடியுரிமை பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து எவரும் வெளியேற வேண்டிய அவசியமில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குளியாபிட்டி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து யாராவது வெளியேறினாலும் இல்லாவிட்டாலும் தேர்தலில் வெற்றி பெறுவேன்” என கூறினார்.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் வீழ்ச்சியுற்ற தேங்காய் தொழிலை புதுப்பிப்பதாக உறுதியளித்த அவர், அனைத்து பயிர்களுக்கும் இலவச உரங்களை வழங்குவதே அதற்கான வழி என்றும் கூறினார்.
மேலும் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக குளியாபிட்டியில் நவீன பூங்காக்கள், கைத்தொழில் வலையம் மற்றும் தொழில்நுட்பட கல்லூரிகளை அமைப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

No comments