சஜித்துக்காக கிளிநொச்சியில் 108 தேங்காய் உடைப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக 108 தேங்காய்கள் உடைத்து விசேட வழிபாடு கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் குறித்த விசேட வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள், 108 தேங்காய்களை உடைத்து, குறித்த விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்  தபால் மூல வாக்களிப்புக்கள் இன்றுடன நிறைவடையும் நிலையில் இந்த விசேட வழிபாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments