பாசையூர் பகுதியில் இரண்டு கிலோ வெடிமருந்து மீட்பு

பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து இரண்டு கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை மீட்கப்பட்டதாக யாழ். விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
மேற்படி வெடிமருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்காக கொண்டுவரப்பட்ட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் குறித்த வெடிமருந்து தொடர்பாக இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

No comments