ஊடகவியலாளர்களிடம் சிஐடி விசாரணை; கவலை வெளியீடு

'நியூஸ் ஹப்' இணைய ஊடகச் சோதனை மற்றும் 'த லீடர்' இணைய ஆசிரியர் தனுஷ்க சஞ்சய, 'வொயிஸ்டியூப்' இணைய ஆசிரியர் துஷார விதாரன உள்ளிட்டோரை சிஐடி விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் தொழில்முறை இணைய ஊடகவியலாளர்கள் சங்கம் மற்றும் உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஆகியன கவலை வெளியிட்டுள்ளன.

நேற்று (28) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments