ஆரம்பமானது ஊடகப்படுகொலைகளிற்கான நீதிப்பயணம்!


ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு வடக்கு முழுவதும் மக்களை சந்திக்கும் விழிப்புணர்வு பயணத்தினை யாழ்.ஊடக அமையம்; இன்று ஆரம்பித்துள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி, அனுஸ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு, யாழ்.ஊடக அமையம் மீண்டும் ஊடகப்படுகொலைகளிற்கு நீதியை வலியுறுத்தியிருந்தது.

இன்று சனிக்கிழமை மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் துண்டுபிரசுரங்களை தென்மராட்சி மற்றும் வடமராட்சி மக்களிடையே யாழ்.ஊடக அமையம் விநியோகித்திருந்தது.

யாழ்.நகரிலுள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுதூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சகிதம் ஊடகவியலாளர்களது பயணம் அனைத்து பிரதேசங்கள் வரையிலும் தொடர்ந்திருந்தது.

தொடர்ச்சியாக வவுனியா,மன்னார்,முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைப்புக்களுடன் இணைந்து விழிப்புணர்வு பயணிக்கவுள்ளதாக யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments