கோத்தாவுக்கு எதிரான உண்ணாவிரதம் நிறுத்தம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை குடியுரிமையை துறந்தமை தொடர்பான ஆவணங்களை வெளியிடக் கோரி தேரரினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
குறித்த கோரிக்கையை முன்வைத்து இங்குவரட்டே சுமங்கல தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை தனது உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.
பொலிஸாரின் அறிவுறுத்தலையடுத்தே, தேரர் இன்று காலை உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

No comments