எல்லை மீறிய இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்கரையின் வடக்கு கடற்பகுதியில் வைத்து, இந்த மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வள இயக்குநரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

No comments