தலைவரின் படத்தை பதிவிட்ட ஒருவர் கைது!

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூல் மற்றும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் நேற்று (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஹொரணை மத்திய மண்டல தனியார் நிறுவனத்தில் தொழில்புரியம் சந்தேக நபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக குறித்த நபர் ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments