ஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) 1000 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டமே இன்று 1000 நாட்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று (15) முற்பகல் வவுனியா கந்தசுவாமி ஆலயம் முன்னால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது உறவுகளை கண்டுபிடிக்க போஸ்னிய பாணியிலான நடைமுறை தேவை என்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் தெரிவித்தார்.




No comments