இன்றும் வெளியேறினார் சுமந்திரன்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இக்கலந்துரையாடலின் இடைநடுவில் சுமந்திரன் எம்பி பிறிதொரு சந்திப்பு இருப்பதாக தெரிவித்து வெளியேறியுள்ளார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட அவர்,

கலந்துரையாடல் ஆரோக்கியமாக நடைபெறுகிறது. ஆவணங்களை இறுதி செய்யும் செயற்பாடு இடம்பெறுகிறது. நிச்சயம் இன்று ஒரு இணக்கப்பாடு காணப்படும். - என்றார்.

No comments