தேரர்களின் அடாவடி மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் இன்று(14) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.
எனினும் விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறியமைக்கு எதிராகவே இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments