சஜித் வெல்வார்:விக்டர் ஜவன்!


தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளின் நாயகனாக சஜித் பிரேமதாசாவை மக்கள் நினைக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அதிகமானது. இது மகிந்த மற்றும் கோத்தபாய தரப்புக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அதனால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் இலகுவான வெற்றியை பெறப்போகிறார்" இவ்வாறு மூத்த ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் வரப்போகின்ற ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரம் கூட இருக்காது. பெயரளவில் ஒரு ஜனாதிபதி மட்டுமே. அதை இன்னும் எவரும் விளங்கிக்கொள்ளவில்லை. அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்திற்கு இயற்கையாகவே சென்று விடும். ஆகக்குறைந்த ஒரு அமைச்சைக்கூட ஜனாதிபதி வைத்திருக்க முடியாது. 19ஆவது திருத்த சட்டத்ததால் இதுவே நடந்துள்ளது.


இலங்கையின் பொருளாதாரம் மட்டுமல்ல சமூக வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ள தருணம் இது. மாற்றம் ஒன்று தேவையான நேரம். மாற்றுப்போட்டிகள் இருந்தாலும் சஜித் மற்றும் கோத்தபாய ஆகியோர் இடையில் தான் பிரதான போட்டி உள்ளது.

கரு அல்லது ரணில் போட்டியிட்டிருந்தால் கோத்தபாயவிற்கு வெற்றிக்கான வாய்ப்புக்கள் இருந்தன.


சஜித் ஒரு பெரும் ஆளில்லாது போனாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழகைளின் நாயகனாக மக்களால் பார்க்கப்படுகின்றார். தங்களுடைய தரத்தில் ஒருவன் அரசனாகின்றான் என்பதே மக்களின் மகிழ்ச்சியாகின்றது.

சஜித்தின் தந்தை பிஜரரேமதாச அடிமட்ட மக்களுக்கு அதிக சேவை செயடதவராக மக்களிடையே பிரபல்யமானவர். உண்மையிலேயே ஏழைகள் தலைநிமிர்ந்து நிறுக்கும் பல திட்டங்கள் அவருடையவை. அவற்றால் வாழும் கிராமத்தவர்கள் அதிகமானவர்கள்.

அந்தத் திட்டங்களே வேற பெயர்களில் இப்போது வலம் வருகின்றன.இலங்கையில் பின்தங்கிய சமூகத்தனர் அதிகமாக வாழ்கின்றனர். இதைவிட சஜித்தை அவர்கள் தமது மீட்பாராக நினைக்கின்றார்கள். இதனால் சஜித் இலகுவான வெற்றியொன்றை பெறுவார். அடிமட்ட மக்கள் எனும்போது அது தென்பகுதியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மலையகத்திலும் இதே தாக்கத்தினை ஏற்படுத்தும். இந்நிலை கோத்தபாயவிற்கு இல்லை.

ஐ.தே.க விற்க உள்ள வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற சஜித்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இங்கே சஜித் தர்சனவாதியா?எதிர்கால சிந்தனை உள்ளவரா? என்பதையெல்லாம் இந்த அடிமட்ட மக்கள் தேடப்போவதில்லை. எங்களில் ஒருவருக்கே என்று அந்த மக்கள் வாக்களிப்பதாக வாக்களிப்பர்.

அதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் என கூறியுள்ளார்.

No comments