பொலிஸ் அதிகாரிகள் இருவர் அதிரடி பணி நீக்கம்

கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவித்து போலிக் கடிதம் அனுப்பியமை தொடர்பில் கொழும்பு கோட்டை நிர்வாக பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யான மற்றும் உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று கடந்த 02 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளில் தெரியவந்த விடங்களுக்கு அமைய பொய்யான தகவல்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்படும் பிரதான பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கோட்டை பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments