பிரான்சு அரசதேர்வு மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ்க்கலை அறிமுறைத் தேர்வு – 2019
அனைத்துலக தமிழ்கலை நிறுவகமும் (IITA), பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் இணைந்து பிரான்சில் நடாத்திய தமிழ் கலை அறிமுறைத்தேர்வு 2019 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil ) இன்று (13.10.2019) ஞாயிற்றுக்கிழமை இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து பரதநடனம், தண்ணுமை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும், பிற்பகல் 13.30 மணிக்கு வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு இடம்பெற்றது. இம்முறை அறிமுறைத் தேர்வுக்கு மொத்தம் 397 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
தேர்வுக் கடமையில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைப்பாட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இத்தேர்வு இதே நாளில் பிரித்தானியா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ்,டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
காலை 9.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து பரதநடனம், தண்ணுமை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும், பிற்பகல் 13.30 மணிக்கு வாய்ப்பாட்டு, வயலின், வீணை ஆகிய பிரிவு மாணவர்களுக்கும் தமிழ் கலை எழுத்துத்தேர்வு இடம்பெற்றது. இம்முறை அறிமுறைத் தேர்வுக்கு மொத்தம் 397 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
தேர்வுக் கடமையில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைப்பாட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இத்தேர்வு இதே நாளில் பிரித்தானியா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ்,டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment