பூஜித் - ஹேமசிறி மீண்டும் கைதாகவுள்ளனர்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்குவது, சட்டத்திற்கு முரணான விடயம் என தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) சற்றுமுன் பிணை உத்தரவை இரத்து செய்துள்ளது.

இதன்படி குறித்த இருவரையும் கைது செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிய கொலை குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

No comments