தீபாவளிக்கு விடுதலை?


கடந்த-03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 18 யாழ். மாவட்ட மீனவர்களும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி கடந்த-23 ஆம் திகதி யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் சார்பாக சங்கப் பிரதிநிதிகளுக்கும், யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் குழுவிற்குமிடையில் பேச்சுவார்த்தையொன்றும் நடாத்தப்பட்டது.
இந்நிலையில் யாழ். இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இந்த விடயம் இந்திய மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்தே கைதான யாழ். மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments