11 பேர் சுட்டுகொலை! வலுவடைகிறது போராட்டம்;

ஈராக்கில் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது, இதனை  காவல்துறையினர் தடுக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கை கலவரமாகியதில் காவல்துறையினர் 11 பேரை சுட்டுகொன்றுள்ளனர்.

ஈராக்கில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவை அந்நாட்டில் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நேற்று ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் திரளாக  கூடியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனை சீர் செய்ய காவல்துறையினர் துவக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒத்துழைக்காததால், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.
இதனிடையே வன்முறை வெடித்ததால், காவல்துறையினருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்ற.

No comments