வவுனியாவிலும் தியாக தீபத்தின் நினைவேந்தல்

தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இன்று (26) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

நீதிக்கும், அடக்குமுறைக்கு எதிரான அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை பொங்கு தமிழ் நினைவு தூபிக்கு முன்னால் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தியாகதீபம் திலீபனின் நினைவு உருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூபி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.



No comments