இராணுவ முகாம் அருகில் தேரரின் உடலை தகனம் செய்யுங்கள்! நீதிமன்றம் அதிரடி


மேதாலங்க தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அப்பால் உள்ள இராணுவ முகாம் அருகில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (23) சற்றுமுன் 12 மணிக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்து.

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் கடந்த (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

குறித்த தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்ய பாதுகாப்பு படையினர் உட்பட பௌத்த தேரர்கள் முயற்சித்து வந்தனர்.

இதனையடுத்து அவரது உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்வதற்கு தடை கோரி பிள்ளையார் ஆலயத் தரப்பினர் தாக்கல் செய்த வழக்கில் நேற்று அதிகாலை முதல் இன்று வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல் தகனம் தொடர்பான தீர்ப்பு விசாரணை இன்று (23) காலை முதல் இடம்பெற்றது. இதன்போது தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் பலரும் தீர்ப்புக்காக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments