நீதிமன்றத் தீர்ப்பை மீறித் தேரர்கள் அடாவடி


மேதாலங்க தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அப்பால் உள்ள இராணுவ முகாம் அருகில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (23) மதியம் 12 மணிக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்து.

இந்நிலையில் குறித்த நீதிமன்ற தீர்ப்பை மீறி மேதாலங்க தேரரின் உடலை தற்போது பிறிதொரு இடத்தில் தகனம் செய்ய தேரர்கள் உள்ளிட்ட சிங்கள மக்கள முயற்சி வருகின்றனர். இதனால் நீராவியடிப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் கடந்த (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்ய பாதுகாப்பு படையினர் உட்பட பௌத்த தேரர்கள் முயற்சித்து வந்தனர். இதனையடுத்து அவரது உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தகனம் செய்வதற்கு தடை கோரி பிள்ளையார் ஆலயத் தரப்பினர் தாக்கல் செய்த வழக்கில் நேற்று அதிகாலை முதல் இன்று வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உடல் தகனம் தொடர்பான தீர்ப்பு விசாரணை இன்று (23) காலை முதல் இடம்பெற்றது. விசாரணை முடிவில் தேரரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியிருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் ஞானசார தேரர் உள்ளிட்ட தேரர்கள் பலரும் தீர்ப்புக்காக காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments