34 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்


வேதனம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை முன்வைத்து இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் இன்று (23) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

பொது நிர்வாக அமைச்சினால் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) காலை முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பீ.ஏ.பி. பஸ்நாயக்க தெரிவித்தார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், அரச முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 34 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொது நிர்வாக அமைச்சின் நிர்வாக அதிகாரிகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதன் ஊடாக அனைத்து அரச சேவையிலும் கடுமையான வேதன முரண்பாடு ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments