சடலத்தினால் வந்த வினை; பாலிதவிற்கு விளக்கமறியல்

அனுமதி பெறப்படாத காணி ஒன்றில் பலவந்தமாக சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பாலித தேவரப்பெருமவை செப்டம்பர் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகமை மஜிஸ்ரேட் நீதிமன்றம் இன்று (10) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை கிராம மக்களும், தேவரப்பெரமவும் இணைந்து புதைத்துள்ளனர். இது தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments