சிறுமிகள் தப்பி ஓட்டம்?



வவுனியா வேப்பங்குளம் அன்பகம் சிறுவர் இல்லத்தில் இருந்து இரு சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றுவரும் துன்புறுத்தல்களுக்கு முனம்கொடுக்க முடியாத நிலையிலேயே சிறுமிகள் இருவரும் தப்பிச்சென்று தமது உறவினர்களிடம் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ் அன்பகம் சிறுவர் இல்லமானது நீண்டகாலமாக இயங்கி வருவதுடன் இங்கு வளர்ந்த பல யுவதிகள் திருமண பந்தத்திலும் இணைந்து வாழும் நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் தூங்கியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையிலேயே இரு சிறுமிகளும் நேற்று முன்தினம் சிறுவர் இல்லத்தில் இருந்து சென்றுள்ள நிலையில் இவர்களை தேடி அறியும் செயற்பாட்டில் சிறுவர் இல்லத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments