யாழில் சிக்கியது பெருந் தொகை கஞ்சா!


வீட்டு வளவுக்குள் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை புதைத்து வைத்திருந்த குடும்பத் தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் மாவட்ட போதைத் தடுப்புப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.

“யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அல்வாயில் உள்ள வீடு ஓன்றுக்குள் சோதனையிடப்பட்டது. உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 36 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் நிலமட்டத்துக்கு மணல் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது.

அதனை புதைத்து பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த வீட்டின் உரிமையாளரான 44 வயதுடைய குடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments