தில்ருக்ஷியின் சொலிச்சிட்டர் பதவி பறிபோனது!


இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர மற்றும் தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு தொலைபேசி ஊடாக சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர், அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அவன்ட் காட் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசியில் பேசிய போது அவன்ட் காட் வழக்கு அரசியலுக்காக தாக்கல் செய்யப்பட்டது என்று கூறியமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments