அத்துமீறிய மீனவர்கள் 30 பேர் கைது

சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 மீனவர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றின் நீதிபதி பவித்ரா சஞ்சீவனியினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மீனவர்கள் வசமிருந்த படகு உட்பட ஏனைய கருவிகளும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

காலி மற்றும் பேருவளை மீன்வளத் துறைமுகத்திலிருந்து பயணம் செய்த மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையை கடந்து செல்ல முயற்சித்த வேளையிலேயே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

No comments