இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் எட்டு பேர் பணி நீக்கம்


சூதாட்ட மையம் ஒன்றில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுதலை செய்த குற்றத்திற்காக சிலாபம் பொலிஸ் பிரிவுடன் இணைந்த இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 8 பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments