மஹிந்தவின் நேரடிச் செயற்பாட்டாளர் தீபன் பலி!

ஏ-9 நெடுஞ்சாலையில் இன்று (04) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான நேரடிச் செயற்பாட்டாளராக செயற்பட்ட இலண்டன் பிரைஜா உரிமை பெற்ற தீபன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டிக்கு அண்மித்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் பயணித்த காரும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினை அடுத்து அவரது சடலம் மக்களாலும் படையினராலும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments