இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கடலட்டைகள் இராமநாதபுரத்தில் பறிமுதல்!




  மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ 70 லட்சம் மதிப்பிலான 350 கிலோ பதப்படுத்தப்பட்ட  கடல் அட்டைகள் பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் போலிஸார் கடத்தலுக்கு பயண்படுத்திய வாகனம் மற்றும் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் மண்டபம் வனத்ததுறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

   மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத் தோணியில்  தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் மெரைன் காவல்நிலைய ஆய்வாளர் கனகராஜ், துனை ஆய்வாளர் கனேச மூர்த்தி,ராஜ்குமார் ஆகியோர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மெரைன் போலிஸாரை கண்டதும் ஓம்னி வேன் ஒன்று நிற்காமல் சென்றது சந்தேகம் அடைந்த போலிஸார் பாம்பன் காவல் சோதனை சாவடிக்கு தகவல் கொடுத்தனர்

 இதனையடுத்து ஓம்னி காரை மடக்கி பிடித்த காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்ததில்  காரில் ஏழு சாக்கு மூட்டைகளில் 350 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து மெரைன்  போலீஸார் விசாரனை செய்ததில் இராமேஸ்வரத்தை சேர்ந்த லிங்கநாதன்,சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்;காக கடல் அட்டைகளை பதப்படுத்தி சாக்கு பைகளில் கட்டி காரில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

   தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓம்னி காரையும் பறிமுதல் செய்த மெரைன் போலிஸார் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள்  மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

விசாரனைக்கு பின்னர் கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்ப ரூபாய் சுமார் 70 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   கடந்த ஒரு வாரத்தில்; இலங்கைக்கு கடத்த இருந்த ஆயிரம் கிலோ தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் இலங்கையில் இருந்த கடத்தி வரப்பட்ட ஏழு கிலோ கடத்தல் தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments