சித்தார்த்தனின் ஆதரவாளருக்கு இடமாற்றம்?

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் ஆதரவாளரான சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முருகையா செல்வக்குமார், மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு சார்பாக செயற்படுவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், சுன்னாகத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளரால் கூலிக்கு அமர்த்தப்பட்டு வீடொன்றின் மீது நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டை விசாரணையின்றி இணக்கமாக முடிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.

நாடுமுழுவதும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 25 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 32 பேர் என 64 பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான இடமாற்றம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையிலேயே சுன்னாகம் காவல்நிலைய பொறுப்பதிகாரி மண்டபத்தின் உரிமையாளருக்குச் சார்பாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு ஜனாதிபதியின் செயலாளர் வரை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments