ஜேர்மன் தூதுவருடன் யாழ் முதல்வர் சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்டே ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மாநகர முதல்வராக பொறுப்பேற்றதன் பின்னர் ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரோடு சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவாகும் எனக் குறிப்பிட்ட முதல்வர் ஆனல்ட் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

ஜேர்மன் நாட்டின் அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும், இலங்கை தொடர்பான நாட்டின் சில நிலைப்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்த உயர்ஸ்தானிகர் புஐணு என்ற அமைப்பினூடாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், கல்வி மற்றும் தொழில் ரீதியாக ஜேர்மன் அரசின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் விரிவாக விளக்கியிருந்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.

No comments