ரணில் தந்தது விருந்து மட்டுமே?


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து வைபவத்தில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டிருக்க வில்லையென பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

நேற்றிரவு நடைபெற்ற விருந்து வைபவத்தில் அரசியல் விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை. பெரும்பாலானோர் தமது குடும்பங்களுடன் கலந்துகொண்டிருந்தனர். ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமல்லாது கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று (23) மாலை மாத்தறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் இரவு விருந்தில் கலந்துகொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது ஒரு அரசியல் நிகழ்வாக அல்லாமல் சிநேகபூர்வமான ஒரு சந்திப்பாகவே காணப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.

நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்

No comments