சஜித் மக்கள் பணத்தை திருடுபவன் அல்லவாம்

நாட்டின் அனைத்து பிரஜைகளும் நன்மையடையும் சிறந்த பொருதார திட்டத்தை நான் வைத்துள்ளேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற நிகழ்வில் பேசும் போதை இதனைத் தெரிவித்தார். மேலும்,

குறித்த பொருளாதார கொள்கையை நவம்பர், டிசம்பரில் ஆரம்பிக்கவுள்ளேன். சஜித் பிரேமதாச இந்நாட்டின், மக்களின், அரசின் பணத்தை திருடுபவர் அல்ல அவ்வாறு திருடியவர்களே சஜித் பிரேமதாசவினால் இது முடியாது என்கின்றனர். நாட்டின் சொத்தை சஜித் பிரேமதாச சரியாக பயன்படுத்தி இந்நாட்டை வழிநடுத்துவார் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். என்றார்.

No comments