சஜித்தினால் திறந்து வைக்கப்பட்டது 'திருவேரபுரம்' கிராமம்

வீடமைப்பு நிர்மாணத்துறை அபிவிருத்தி அமைச்சினால் தென்மராட்சியின் மந்துவில் கிராமத்தில் அமைக்கப்பட்ட திருவேரபுரம் வீட்டுத் தொகுதி பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) மதியம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திருவேரபுரத்தில் அமைக்கப்பட்ட 20 வீடுகளை பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சரோடு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், இந்திய தூணைத் தூதுவர் பாலச்சந்திரன், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன், மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments