இறந்த தந்தையின் முன் தாலி கட்டி, திருமணம் செய்த தம்பதியினர்!

இறந்த தந்தையின் முன் தாலி கட்டி, திருமணம் செய்த தம்பதியினர் தந்தையின் உடலோடு திருமணக் கோலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் விழுப்புரத்திற்கு அருகே உள்ள சிங்கானூர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி அலெக்ஸாண்டர் (31) என்பவரது திருமணம் நடைபெற இருந்த நிலையில்,. எதிர்பாராதவிதமாக நேற்று அவரது தந்தை தெய்வமணி உயிரிழந்தார். இந்நிலையில் தான் மணமுடிக்க இருந்த அன்னபூரணியை அழைத்து தனது தந்தையின் உடல் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார் அலெக்ஸாண்டர். இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
அலெக்ஸாண்டரும், அன்னபூரணியும் மயிலம் கிராமத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றிவருகின்றனர்.
“நாங்கள் அடுத்த மாதம்தான் மயிலம் ஊரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைத்து திருமணத்திற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக தெய்வமணி இறந்துபோனார். இவரது இறுதிசடங்கு சனிக்கிழமை நடைபெறும்” என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments