பாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை

கொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த இருவரை மன்னா கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

சம்பவத்தில் பாதாள குழுவின் முக்கிய குற்றவாளியான ஆனமலு ரங்கா (39) மற்றும் (22) வயதுடைய ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments